Friday, May 22, 2009

புரட்சிக்கான தீபம்....

இருண்ட வீட்டுக்கு வெளிச்சம்
தந்தீர்கள் - எங்கள்
கூரைகளை எரித்து...

மழையில் நனைந்தோம்...
குடைகள் தந்தீர்கள் - நாங்கள்
வெள்ளத்தில் மூழ்கியபோது...

உணவுகள் தந்தீர்
உப்பில்லாமல் - அதை
சமன் செய்தது எங்கள்
கண்ணீர் துளி...

வினாவின் விளக்கத்தில்
விடைகள் தெரிந்தது - ஆணால்
பரிட்சையின் நேரம் தான் முடிந்திருந்தது...

தேர்தல் முடிந்ததும்
கைகழுவும் இந்தியா...
தமிழர்கள் என்ன
சாப்பாட்டுப் பந்தியா...

துரோகங்கள் இழைக்க
சாபங்கள் தழைக்க
என் வயிறு
எரிகிறது - புரட்சிக்கான தீபம்....

No comments: