இருண்ட வீட்டுக்கு வெளிச்சம்
தந்தீர்கள் - எங்கள்
கூரைகளை எரித்து...
மழையில் நனைந்தோம்...
குடைகள் தந்தீர்கள் - நாங்கள்
வெள்ளத்தில் மூழ்கியபோது...
உணவுகள் தந்தீர்
உப்பில்லாமல் - அதை
சமன் செய்தது எங்கள்
கண்ணீர் துளி...
வினாவின் விளக்கத்தில்
விடைகள் தெரிந்தது - ஆணால்
பரிட்சையின் நேரம் தான் முடிந்திருந்தது...
தேர்தல் முடிந்ததும்
கைகழுவும் இந்தியா...
தமிழர்கள் என்ன
சாப்பாட்டுப் பந்தியா...
துரோகங்கள் இழைக்க
சாபங்கள் தழைக்க
என் வயிறு
எரிகிறது - புரட்சிக்கான தீபம்....
Friday, May 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment