ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்..


தமிழ் நாட்டு ஆளுமைகளில் மிக முக்கியமானவரும், அறிவுசார் கருத்துகளில் சக மனிதனுக்காக எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்குவதில் முதன்மையானவருமான எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விமர்சகர் திரு.ஞாநி அவர்கள், பெங்களுருவிற்கு வருகை தருகிறார். அலுவல் நிமித்தமாக பெங்களுரு வரும் அவர், அப்படியே வாசகர்களையும் சந்தித்து (பிப்ரவரி 10 ம் தேதி) கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
49ஓ, விகிதாசார தேர்தல் முறை, 2011 சட்டமன்ற தேர்தல், கோலம், கேணி, தீம் தரிகிட, பரிக்ஷா, இடஒதுக்கீடு,அரசியல், சமுகம், வாழ்க்கை, என பல தளங்களில் அவரிடம் கேள்விகள் கேட்டு அளவளாவலாம். அவரை சந்திக்க விரும்பும் வாசக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
இடம்: பெங்களூர் தமிழ் சங்கம்.
நாள்: 10 - 02 - 11 (வியாழன்)
நேரம்: மாலை 6 மணி.
தொடர்புக்கு: thiruji@gmail.com, 09980122730